நான் அதிகம் எழுதுவபன் அல்ல. இன்னும் சொல்ல போனால் எழுதுபவனே அல்ல. அதனால் தான் என்னவோ வாசிக்க நேரம் கிடைக்கிறது.
இந்த புத்தக கண்காட்சியில் விநாயக முருகனின்((VM) "ராஜீவ் காந்தி சாலை" மற்றும் சில புத்தகங்களும் வாங்கி படிக்க துவங்கினேன். இது சாருவால் வந்த வினை. I think i took the bait. அந்த சண்டை இல்லாமல் இருந்திருந்தால் இதை வாங்கி இருக்க மாட்டேன்.
சாரு தரமற்ற வார்த்தைகளினால் இவரை திட்டியது தவறு என்பதில் எனக்கு எந்த இய்யபாடும் இல்லை. அனால் இந்த புத்தகத்தை (இவரை அல்ல) இதை தவிர வேறு எப்படியும் திட்டி இருக்க முடியாது. எந்த ஒரு வகையிலும் சேர்க்க முடியாத வகையில் மிக திறமையாக உள்ளது இந்த நொவெலின் பாணி. முடிந்தால் VM என்ன சொல்ல வருகிறார், அது என்ன பாணி என்று அவர் தனி புத்தகமாக போடலாம். விளங்கும்.
சில கதாபாத்திரங்களின் பார்வையில் அந்த சாலை எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது என்று ஒரு 70 பக்கம். பின் பழனி என்ற கதாபாத்திரம் பழைய தினத்தந்தி, தினமலர் போன்றவற்றில் வரும் கள்ளகாதல் செய்திகள், செவி வழி கிசுகிசு, ஜூவி, குமுதம், நக்கீரன் எல்லாம் பக்கங்களை நிரப்பும் செய்திகள் எல்லாவற்றயும் தொகுத்து ஒரு 50 பக்கம். இடையில் கொஞ்சம் "மலையாளிகளையும்" " பாபான்களையும்" ஒரு முன்வன்மத்தோடும், சில முன் முடிவுகளோடும், ஒரு 10 பக்கம். இது போக மானே தேனே எல்லாம் காதலின், காமத்தின், வாழ்கையின் வாதை, வலி என்று பக்க நிரப்பல்கள். இத எதுவும் மனதில் ஒட்டவே இல்லை. காரணம் எந்த கதை மாந்தரும் நம் மனதில் பதிய மறுக்கிறார்கள். Character establishment is pathetic.
உண்மையில் இதனை முழுமையாக படிக்க அசாத்திய பொறுமை வேண்டும். கதையில் வரும் யாரும் ஒரு வாசகனுக்கு /அவன் மனதில் எந்த பாதிப்பும் ஏற்படுத்திவிட கூடாது என்று மிக கவனமாக எல்லா கதாபாத்திரத்தையும் மிக மொக்கையாக சித்தரித்துள்ளார் .
இது எல்லாவற்றையும் விட இந்த IT துறையே இப்படித்தான் என்பது போன்ற ஒரு தவறான பிம்பத்தை இவர் கட்டியமைக்க முயல்வது தான் என்னால் மன்னிக்க முடியாதது. இவர் ஜாதியை பேசும் இடங்களில் கூட அது சம்பந்தமான கேள்விகளை முன்வைபதில்லை இவரது எழுது. சும்மா ஒரு "இதுக்கு" திட்டி வைப்போம் என்ற அளவில் தான் அதையும் கையாண்டிருக்கிறார். அதையும் balance செய்வதற்கு "சௌம்யா" என்ற கதாபத்திரம்.
இன்றைய சில தமிழ் இயக்குனர்களை போல் "டாஸ்மாக்" ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிறது இன்றைய இலக்கியத்தில்!!. தவறில்லை. பக்கங்களை நிரப்ப முடிவு செய்த பிறகு " கிளாஸ் கழுவுவது முதல், வாந்தி எடுப்பது வரை" விவரிக்கலாம்.
இத்தனை பக்கங்கள் எழுதி உள்ளார் என்பது தாண்டி இவரை இந்த புத்தகத்திற்காக பாராட்ட இயலாமைக்கு மன்னிக்கவும். அதற்க்கு காரணம் (என்னளவில்) கொஞ்சமும் Depth இல்லாத அவரது எழுத்து நடை.
இதனை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றால் - நானும் அதே சாலையில் 2000 ஆண்டு முதல் தினமும் சென்று வருகிறேன். இவர் கண்ட காட்சிகளில் பலவற்றை நானும் பார்த்திருக்க கூடும். இதே துறைதான். எல்லாவற்றிற்கும் மேல் இதனை வாங்கி அதை படித்தும் முடித்திருகிரேன் .
கோவில் மிருகம் நன்றாக இருந்தது.
ராஜு ராமஸ்வாமி
இந்த புத்தக கண்காட்சியில் விநாயக முருகனின்((VM) "ராஜீவ் காந்தி சாலை" மற்றும் சில புத்தகங்களும் வாங்கி படிக்க துவங்கினேன். இது சாருவால் வந்த வினை. I think i took the bait. அந்த சண்டை இல்லாமல் இருந்திருந்தால் இதை வாங்கி இருக்க மாட்டேன்.
சாரு தரமற்ற வார்த்தைகளினால் இவரை திட்டியது தவறு என்பதில் எனக்கு எந்த இய்யபாடும் இல்லை. அனால் இந்த புத்தகத்தை (இவரை அல்ல) இதை தவிர வேறு எப்படியும் திட்டி இருக்க முடியாது. எந்த ஒரு வகையிலும் சேர்க்க முடியாத வகையில் மிக திறமையாக உள்ளது இந்த நொவெலின் பாணி. முடிந்தால் VM என்ன சொல்ல வருகிறார், அது என்ன பாணி என்று அவர் தனி புத்தகமாக போடலாம். விளங்கும்.
சில கதாபாத்திரங்களின் பார்வையில் அந்த சாலை எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது என்று ஒரு 70 பக்கம். பின் பழனி என்ற கதாபாத்திரம் பழைய தினத்தந்தி, தினமலர் போன்றவற்றில் வரும் கள்ளகாதல் செய்திகள், செவி வழி கிசுகிசு, ஜூவி, குமுதம், நக்கீரன் எல்லாம் பக்கங்களை நிரப்பும் செய்திகள் எல்லாவற்றயும் தொகுத்து ஒரு 50 பக்கம். இடையில் கொஞ்சம் "மலையாளிகளையும்" " பாபான்களையும்" ஒரு முன்வன்மத்தோடும், சில முன் முடிவுகளோடும், ஒரு 10 பக்கம். இது போக மானே தேனே எல்லாம் காதலின், காமத்தின், வாழ்கையின் வாதை, வலி என்று பக்க நிரப்பல்கள். இத எதுவும் மனதில் ஒட்டவே இல்லை. காரணம் எந்த கதை மாந்தரும் நம் மனதில் பதிய மறுக்கிறார்கள். Character establishment is pathetic.
உண்மையில் இதனை முழுமையாக படிக்க அசாத்திய பொறுமை வேண்டும். கதையில் வரும் யாரும் ஒரு வாசகனுக்கு /அவன் மனதில் எந்த பாதிப்பும் ஏற்படுத்திவிட கூடாது என்று மிக கவனமாக எல்லா கதாபாத்திரத்தையும் மிக மொக்கையாக சித்தரித்துள்ளார் .
இது எல்லாவற்றையும் விட இந்த IT துறையே இப்படித்தான் என்பது போன்ற ஒரு தவறான பிம்பத்தை இவர் கட்டியமைக்க முயல்வது தான் என்னால் மன்னிக்க முடியாதது. இவர் ஜாதியை பேசும் இடங்களில் கூட அது சம்பந்தமான கேள்விகளை முன்வைபதில்லை இவரது எழுது. சும்மா ஒரு "இதுக்கு" திட்டி வைப்போம் என்ற அளவில் தான் அதையும் கையாண்டிருக்கிறார். அதையும் balance செய்வதற்கு "சௌம்யா" என்ற கதாபத்திரம்.
இன்றைய சில தமிழ் இயக்குனர்களை போல் "டாஸ்மாக்" ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிறது இன்றைய இலக்கியத்தில்!!. தவறில்லை. பக்கங்களை நிரப்ப முடிவு செய்த பிறகு " கிளாஸ் கழுவுவது முதல், வாந்தி எடுப்பது வரை" விவரிக்கலாம்.
இத்தனை பக்கங்கள் எழுதி உள்ளார் என்பது தாண்டி இவரை இந்த புத்தகத்திற்காக பாராட்ட இயலாமைக்கு மன்னிக்கவும். அதற்க்கு காரணம் (என்னளவில்) கொஞ்சமும் Depth இல்லாத அவரது எழுத்து நடை.
இதனை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றால் - நானும் அதே சாலையில் 2000 ஆண்டு முதல் தினமும் சென்று வருகிறேன். இவர் கண்ட காட்சிகளில் பலவற்றை நானும் பார்த்திருக்க கூடும். இதே துறைதான். எல்லாவற்றிற்கும் மேல் இதனை வாங்கி அதை படித்தும் முடித்திருகிரேன் .
கோவில் மிருகம் நன்றாக இருந்தது.
ராஜு ராமஸ்வாமி